Tag: ஃபிக்ஹ் இரவுத் தொழுகை

ஃபிக்ஹ் இரவுத் தொழுகை 08

ஃபிக்ஹ்  இரவுத் தொழுகை பாகம் – 8 💕 எத்தனை ரகாஅத் தொழுவது? ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) ரமளானிலும் மற்ற காலத்திலும் 11 ரகாஅத்தை விட அதிகமாக தொழவில்லை. 4 ரகாஅத் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் கேட்காதீர்கள்.பிறகு 4 ரகாஅத் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் கேட்காதீர்கள். பிறகு 3 ரகாஅத் தொழுவார்கள்.- யா ரசூலுல்லாஹ் நீங்கள் வித்ர் தொழுவதற்கு முன்னால் தூங்குகிறீர்களா?-நபி (ஸல்)-என்னுடைய கண்கள் தான் உறங்குகிறது உள்ளம் உறங்குவதில்லை (முஸ்லீம்) …

Continue reading

ஃபிக்ஹ் இரவுத் தொழுகை 07

ஃபிக்ஹ்  இரவு தொழுகை பாகம் – 7 💕 அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – நம் இறைவன் ஒவ்வொரு இரவும் 3 வது பகுதியில்  முதல் வானத்திற்கு இறங்குகிறான் என்னிடம் யார் பிராத்திக்கிறார்களோ அவர்களுக்கு நான் விடை கொடுக்கிறேன் யார் என்னிடம் கேட்கிறாரோ அவர்களுக்கு நான் வழங்குகிறேன் யார் என்னிடத்தில் பிழை பொறுப்பு தேடுகிறார்களோ அவர்களுக்கு நான் பிழை பொறுப்பு வழங்குகிறேன். 💕 யஃகூப் (அலை) அவர்களது பிள்ளைகள் அவர்களுக்காக பிழை பொறுப்பு தேடிய …

Continue reading

ஃபிக்ஹ் இரவுத் தொழுகை 06

ஃபிக்ஹ்  இரவு தொழுகை பாகம் – 6 🛡 அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்)- இரவிலே தொழுவதற்காக எழுந்து மனைவியையும் எழுப்பி எழ மறுத்தால் தண்ணீர் தெளித்து எழுப்புபவருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக அது போல கணவனையும் எழுப்பும் மனைவிக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக 🛡 அபூஹுரைரா (ரலி) – கணவன் தன் மனைவியை எழுப்பி அவ்விருவரும் 2 ரகாஅத் தொழுதால் அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்தவர்கள் பட்டியலில் பதிவு செய்யப்படுவார்கள்.(அபூதாவூத்)

ஃபிக்ஹ் இரவுத் தொழுகை 05

ஃபிக்ஹ்  இரவு தொழுகை பாகம் – 5 🛡 இப்னு அப்பாஸ் (ரலி) – ஒரு முறை நான் மைமூனா (ரலி) வீட்டில் தங்கியபோது-நபி (ஸல்) தூக்கத்திலிருந்து விழித்து கண்களை கசக்கி ஆல இம்ரான் சூராவில் கடைசி 10  வசனங்கள் ஓதி பிறகு உளூ செய்து தொழ ஆரம்பித்தார்கள்.-இரண்டிரண்டாக 12 ரகாஅத்துகள் தொழுது பிறகு 1 ரகாஅத் வித்ர் தொழுது பிறகு உறங்கினார்கள் பிறகு சுபுஹ் தொழுகையின் பாங்கு சொல்லப்பட்டபின் சுன்னத் தொழுதுவிட்டு சுபுஹ் தொழவைத்தார்கள் (புஹாரி, …

Continue reading

ஃபிக்ஹ் இரவுத் தொழுகை 04

ஃபிக்ஹ் இரவு தொழுகை பாகம் – 4 🛡 ஸூரத்துஸ் ஸஜ்தா 32:15, 16 (15) நம் வசனங்களின் மேல் நம்பிக்கை கொண்டோர் யாரென்றால் அவர்கள், அவற்றின் மூலம் நினைவூட்டப்பட்டால், அவர்கள் விழுந்து ஸுஜூது செய்தவர்களாய்த் தம் இறைவனைப் புகழ்ந்து, துதிப்பார்கள்; அவர்கள் பெருமை அடிக்கவும் மாட்டார்கள். (16)அவர்களுடைய விலாக்களைப் படுக்கைகளிலிருந்து (தூக்கத்தைத் துறந்து) உயர்த்தி அவர்கள் தங்களுடைய இறைவனை அச்சத்தோடும் நம்பிக்கை ஆர்வத்தோடும் பிரார்த்தனை செய்வார்கள்; மேலும் நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து (தானதர்மங்களில்) செலவும் செய்வார்கள். …

Continue reading

ஃபிக்ஹ் இரவுத் தொழுகை 03

ஃபிக்ஹ் இரவு தொழுகை பாகம் – 3 🛡 ஸூரத்துல் ஃபுர்ஃகான் 25:64     وَالَّذِيْنَ يَبِيْتُوْنَ لِرَبِّهِمْ سُجَّدًا وَّقِيَامًا‏ இன்னும், அவர்கள் தங்கள் இறைவனை ஸஜ்தா செய்தவர்களாகவும், நின்றவர்களாகவும் வழிபாடு செய்து இரவிலிருப்பார்களே அவர்கள்.

ஃபிக்ஹ் இரவுத் தொழுகை 02

ஃபிக்ஹ் இரவு தொழுகை பாகம் – 2 🛡 ஸூரத்துத் தாரியாத் 51:15, 16, 17, 18 اِنَّ الْمُتَّقِيْنَ فِىْ جَنّٰتٍ وَّعُيُوْنٍۙ‏ (15) நிச்சயமாக பயபக்தியுடையவர்கள், (சுவர்க்கத்தின்) சோலைகளிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.  اٰخِذِيْنَ مَاۤ اٰتٰٮهُمْ رَبُّهُمْ‌ؕ اِنَّهُمْ كَانُوْا قَبْلَ ذٰلِكَ مُحْسِنِيْنَؕ‏ (16) அவர்கள் தங்களிறைவன் அவர்களுக்கு அளித்ததை (திருப்தியுடன்) பெற்றுக் கொள்வார்கள்; நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்வோராகவே இருந்தனர். كَانُوْا قَلِيْلًا مِّنَ الَّيْلِ مَا يَهْجَعُوْنَ‏ …

Continue reading

ஃபிக்ஹ் இரவுத் தொழுகை 01

ஃபிக்ஹ் இரவுத் தொழுகை பாகம் – 1 🛡 குர்ஆனில் இரவுத்தொழுகை கியாமுல் லைல் மற்றும் தஹஜ்ஜத் என்ற பெயரில் வந்திருக்கிறது.  🛡 தராவீஹ் என்ற வார்த்தை குர்ஆன் மற்றும் ஹதீஸில் இல்லையென்றாலும் பிற்கால இமாம்களால் சூட்டப்பட்ட பெயராகும். 🛡 ஆகவே மேற்கூறப்பட்ட தொழுகைகள் அனைத்தும் ஒரே தொழுகை தான்.